அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்ச்சிகளின் காரணமாக எவர் நல்லவர் எவர் தகாதவர் என பிரித்தறியும் உணர்வை ஒருவாறு இழந்திருந்தான் இந்திரசேனன் . அதனால் தான் மாற்சிம்மன் அழைத்ததும் யார் எவர் என்று எதுவும் கேளாமல் அவனுடன் செல்ல சம்மதித்தான். அது மட்டும் அல்லாது அவனுடன் பேசுவதற்கு அவன் மொழி தெரிய வேண்டுமே என்ற பயமும் இருந்தது. மதுர மொழியை கேளாதே கற்றவனுக்கு அருந்தமிழ் புரியாதது ஆச்சர்யமளித்தது. அவனுக்கு பேசுவதில் தான் பிரச்சனை இருந்ததே ஒழிய அதைப் புரிதலில் எந்த குறுக்கீடும் இல்லை. இப்பொழுதும் அவன் ஏதாவது பேசுவான் என்றே காத்துக் கொண்டிருந்தான். அவனை அன்றி அந்த புதிய நகரைப் புரிந்து கொள்ள வழி ஏது? வந்து இறங்கியதும் அவன் பேசிய மொழிகள் அலுப்பை ஏற்படுத்தினாலும், அவன் பேச்சை கேட்டாக வேண்டிய சூழல் இந்திரசேனனுடையது. அவனுக்கு உரிய பதில் மொழியை பாவங்களிலும், சைகைகளிலும் தெரிவித்திருந்தாலாவது படகில் வரும் பொழுது ஏதாவது பேசி இருப்பான். தான் நாகரிகக் குறைவாக நடந்து கொண்டதாகவே உணர்ந்தான். இந்த பிரச்சனைகளோடு பசியும் சேர்ந்து கொண்டு இருந்தது.
மணற்பரப்பைக் கடந்ததும் ஒரு அழகிய தேர் காத்துக் கொண்டு இருந்தது. அதிகாலை சூரிய வெளிச்சத்தில் பிரகாசமாக ஜொலித்துக் கொண்டு இருந்தது. வண்டியை இழுத்துச் செல்லவதற்கு கட்டப் பட்டிருந்த விலங்கு குதிரை மாதிரியான தோற்றத்தில் இருந்தது. பரிணாம வளர்ச்சியில் குதிரைக்கு ஒரு படி முன்னதான அதே இனத்தைச் சார்ந்த ஒரு விலங்கு வகையாக இருக்கலாம். தேரில் ஏறி அமர்ந்ததும், தேரோட்டி செலுத்த தேர் கடல் இருந்த திசைக்கு எதிர் திசையில் பயணிக்கத் தொடங்கியது. சந்தனம் மற்றும் இன்னும் வித விதமான வாசனைப் பொருட்கள் விற்கும் வீதி, நவரத்தினங்கள் விற்கும் தெரு, நவதானியங்கள் விற்கும் தெரு, பட்டு மற்றும் கதர் துணிகள் விற்கும் தெரு, இவற்றைக் கடந்து சென்றதும் பெரிய பெரிய மாளிகைகள் கொண்ட ஒரு பிரமாண்டமான ஒரு சாலைக்குள் தேர் நுழைந்தது. 'இதற்கு மேலும் தாங்காது.. கேட்டு விட வேண்டியது தான்'.
"நாம் எங்கு இருக்கிறோம்? இவை எல்லாம் என்ன?" "சேனரே.. இருபெரும் பாக்கத்து பட்டினத்தின் மருவூர்ப் பாக்கம் இதுவேயாம். கூல வீதி, அருங்கல வீதி, காருகர் வீதி துறந்து, நகர வீதியில் உளம். கடற்கல வாணிகன் பெருமனை மாடம், யவனப் பெருமனை, வேயா மாடம், பண்டசாலை, மான்கட்காலதர் மாளிகை கொண்டதாம் நகர வீதி." இந்த உரையாடலால் இருவருக்கும் இடையே இருந்த இடைவெளி குறைந்து இருந்தது. எல்லா தெருக்களையும் குறுக்காக கடந்த தேர், இந்த நீண்ட சாலையில் அதன் நீளவாக்கில் ஊர்ந்து மற்றோர் சாலையில் புகுந்தது. மாற்சிம்மன் அறிமுகம் செய்த படி, அந்தத் தெரு இசைப்பாணர் தெரு, அதைத் தொடர்ந்து சித்திரக்கார வீதி, பொற்கொல்லர் வீதி, கருங்கைக் கொல்லர் வீதி, பின் தச்சர், கைவினைஞர், குயவர் வீதிகள் கடந்து சென்றன. அதைத் தொடர்ந்து தேர் ஒரு காட்டிற்குள் நுழைந்தது. வெறும் காட்டை எதிர்பார்த்தவனுக்கு அதற்குள் இருந்த பெரிய சந்தைகளும், வழிபாட்டு இடங்களும் , சிறு மண்டபங்களும் வியப்பளித்தன. வியப்பு தேக்கின கண்களுடன் மாற்சிம்மன் முகம் நோக்கினான். குறிப்பறிந்து "இவ்விடம் பொழில் சூழ் நாளங்காடியாம். ஐவகை மன்றங்களும், பலி பீடிகைகளும் இதன் கண் உள" என்றான்.
மரங்கள் வானளாவ உயர்ந்து இருந்தன, இருப்பனவற்றுள் ஒரு சில மரங்களையே அவனால் இனம் காண முடிந்தது. பெருமளவு நாவல் மரங்கள் இருந்தன, ஆங்காங்கே வேப்பமரங்களும், அரச மரங்களும் இருந்தன. சிறு சிறு கடைகள் மரத்தடியில் இயங்கி வந்தன. எதோ உலோகத்தாலான நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன, பண்ட மாற்று வழக்கும் இருந்தது. ஐந்து அடுக்கு கொண்ட கட்டடங்கள் இருந்தன. இதுவரை மண்ணால் ஆனா வீடுகளே இருந்த நகரில் இப்பொழுது தான் கல் கட்டடமே கண்ணில் பட்டது. பெரிய பெரிய மண்டபங்கள், சில கோயில்கள் போலவே இருந்தன, கோபுரங்கள் மட்டும் தான் இல்லை. பெரிய மதில் சுவர், குளங்கள், அமர்ந்து பேசும் இடங்கள் என பொழுது போக்குவதற்கு என்றே உருவாக்கம் செய்ததாகவே பட்டது. ஆயினும் வணிகர் தவிர பிறர் எவரையும் காணவில்லை. விழாக் காலம் ஆதலால் அனைவரும் கோயிலில் இருக்கலாம். மக்கள் கூட்டம் உள்ள ஒரு கட்டிடமும் இல்லாததைக் கொண்டே இவை எதுவுமே கோயிலாக இருக்க முடியாது என்று உணர்ந்து கொண்டான். சற்று தொலைவில் மரங்களினூடே சலசலத்து ஓடும் ஒரு நதி தெரிந்தது. அங்கு கணிசமான கூட்டம் தெரிந்தது. அந்தக் காட்டைக் கடந்த தேர் மற்றோர் மிகப் பெரிய நகரை அடைந்தது. இந்த நகரம் அகன்ற தெருக்களும், கலை நயமிக்க வேலைப்பாடு கொண்ட வீடுகளையும் கொண்டிருந்தது. செல்வச் சீமான்கள் இருக்கும் மிகப் பெரிய குடி என அறிந்து கொண்டான். இது குறித்து கருத்து கேட்க மாற்சிம்மனிடம் திரும்பிய பொழுது, தேர் நிறுத்தப்பட்டது. நிறுத்தியவர் தோரணையில் அவர் மிகப் பெரிய செல்வந்தர் எனவும், அதிகார பலம் கொண்டவர் எனவும் புரிந்தது. .. (தொடரும்) ..
Sunday, February 7, 2010
Monday, February 1, 2010
இங்கொரு விழாத் தொடக்கம் - 4
'இவன் யாராக இருக்கக் கூடும். இவனுக்கும் என் வயதே இருக்கும். ஆனாலும் சிறுவனுக்கு உரிய துறுதுறுப்பு கண்களில் மின்னுகிறது. யாரோ ஒருவன் அழைத்தான் என்றவுடன் யார் என்று கூட கேளாமல் வருவது ஒரு முதிர்ந்தவன் செய்யும் செயல் அல்லவே. இந்த முதிர்வு கூட இல்லாதவனுக்கா இத்துணை ஏற்பாடு. ஒரு வேளை எனக்கு இவன் அறிமுகம் ஆனதுபோல் இவனுக்கு யாரேனும் என்னை அறிமுகம் செய்திருந்தால்? ஆயினும் நான் இவ்வளவு பேசியும் அவன் அதிகம் பேசாதது ஒரு வித முதிர்ந்த நிலை அல்லவா?' இவ்வாறாக மாற்சிம்மன் குழம்பிக் கொண்டிருந்த வேளையில், மறுபடியும் ஒரு குழந்தை போலாகி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் இந்திரசேனன். அவன் பார்த்த திசையில் பல திமில்கள் கடலில் எழும்பி இருந்தன. என்னே ஒரு வழக்காறு! மருத நிலத்தில் பகலவன் திருநாட்களில் காளையர்கள் காளைகளின் திமில் அழுத்தி 'காளையேறு' என்று பட்டம் சூடிக் கொள்வராம். அது போலே மாபெரும் படகோ, நாவாயோ செலுத்திப் பழகும் முன் முதற்கண் திமில் செலுத்திப் பழகுதல் வேண்டும் என்று விதிமுறை உளது. ஆயினும் திமில் செலுத்தல் இங்கு ஒரு வீரமாகவோ, விழாவாகவோ ஏனோ கொண்டாடப்படுவதில்லை. காளையின் வேகத்திற்கொப்ப அசையும் திமில் போல, அலைகளின் உயரத்திற்கேற்ப திமில் செலுத்துவோர் தலைகள் உயர்ந்தடங்கின.
படகு நறுவிரைத் துறையை அடைந்திருக்க வேண்டும். வாசனையால் கவரப்பட்டு இந்திரசேனனும் கரை நோக்கினான். நிறைமுகத் தீவில் பிற நாட்டு வணிகர்கள் வந்து விற்கும் பொருட்களுக்கு இணையாக புகாரின் பொருட்களும் விற்பனை ஆவதுண்டு. இங்கு வாங்கும் பொருட்களுக்கு வரி கிடையாது என்றாலும் தீவில் இருந்து வெளி செல்லும் பொது எடுத்துச் செல்லும் பொருட்களின் அளவு கட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றது. அவ்வளவை மீறும் போது தண்டல் வசூலிப்பதுண்டு. இந்த சந்தையில் வாணிபம் பெருமளவில் நடப்பதில்லை என்பதால் நாளுக்கு நாள் அங்காடிகள் குறைந்து கிடங்குகளாக மாறி வருகின்றன. இங்கிருந்து நறுவிரையோடன்றி, கூலங்கள், அகில், சந்தனம், பருத்தி மற்றும் எலி மயிரால் செய்த ஆடைகள், எனப் பலவும் ஏற்றுமதி ஆகின்றன. நகரின் விழாவில் நிறைமுகம் பங்கெடுக்க வில்லையோ எனும்படி தினப்படி வேலைகள் நடந்து கொண்டு இருந்தன. பண்டசாலை எனப்படும் கிடங்குகள் தீவின் நடுவில் இருந்தன, இவை வெளிநாட்டினர் வாங்கி வைக்கும் பொருட்களை சேமிக்க கிரயத்தில் விடப்படும். இது தவிர பயணியர் இளைப்பாற ஓங்குயர் மாடங்களும், தீவகச் சதுக்கமும், பூவிரும் மன்றமும் உள்ளன. இவற்றுள் மன்றமும் மாடங்களும் வணிகர் தங்குமிடங்களாகவும், சதுக்கம் சுமை தூக்குவோர், நாவாய் செலுத்துவோர், நாவாய்ப் பணியாளர் தங்குமிடங்களாகவும் செயல் படுகின்றன. அதற்கும் அப்பால் மீனவக் குடிகளும், தீவின் சிறு வியாபாரிகள் குடிகளும் உள்ளன.
படகு தீவில் இருந்து விலகி மருவூர்ப் பாக்கத்தின் கரையை நெருங்கிக் கொண்டிருந்தது. இளவேனிற்காலம் ஆனாலும் வற்றாத காவிரியின் ஓதங்கள் படகை அலைக்கழிக்க ஆரம்பித்திருந்தன. இந்திரசேனனையும் அழைத்துக் கொண்டு தரைதளத்துக்கு மாற்சிம்மன் விரைந்தான். படகைச் செலுத்துபவன் தன் திறமையால் நிதானமாக ஒழுங்குடன் செலுத்தினான். இந்த நீரலையில் தீவங்களை இணைத்து ஒரே தீவாய்ச் சமைத்த வல்லுனர்களின் திறன் போற்றுதற்குரியது. பௌர்ணமி மற்றும் அமாவாசையின் ஓதங்களின் போதும் மூழ்காத படிக்கு செய்தது அளப்பரிய சாதனை. பூம்புகாரின் வல்லுனர்களின் திறம் கண்டு பெருமை அடைந்தான் மாற்சிம்மன். ஒரு வழியாக ஓதங்களின் சுழலில் இருந்து தப்பித்து மீனவர் விளக்கத்தை நோக்கி படகு பயணித்தது. விளக்கத்திற்கு தென் திசையில் சிறுநாவாய் முதல் பெரும் மீன்பிடிப் படகுகள் அணிவகுத்து நின்றன. வடதிசையில் சிறு படகுகள், ஓடங்கள் மற்றும் திமில்கள் நிறுத்தப் பட்டு இருந்தன. இவற்றுள் ஓடங்கள் காவிரியின் எதிர் புனலில் சென்று பட்டினப் பாக்கத்தை அடையும் படி வடிவமைக்கப் பட்டவை. மாற்சிம்மன் எடுத்து வந்த படகு தென்திசை அடைய வேண்டும் என்றாலும் மீன் பிடிப்பதற்காக எடுத்துச் செல்லப் படாததால் பண்டக்காவலர் விளக்கத்தில் சென்று படகை ஒப்புவித்த பிறகே நிலையம் சேரலாம். மாற்சிம்மனும் இந்திரசேனனும் பண்டக்காவலர் விளக்கத்தில் இறங்கியதும் படகு நிலையம் சேர்ந்து விடும்.
பண்டக்காவலர் விளக்கத்தில் மாற்சிம்மனும் இந்திரசேனனும் இறங்கியதும், காவலர் தலைவர் "எட்டிக் குமாரருக்கு வந்தனம். பாக்கம் நீங்கிய யாண்டு வந்தவர் அறியாது மயங்கினன். பொறுத்தருள்க" என்றார். தீவகத்திற்கு படகு வேண்டும் என்று கோரிய போது எவர் என்று அறியாது சிறிய வசதி குறைவான படகே அளிக்கப் பட்டது, இப்பொழுது எப்படி எட்டிக் குமாரர் என்று அறிந்தார் எனத் தெரியவில்லை. பெருவணிகர் மக்கள் பரதகுமாரர் என அறியப்படுவார், அவரினும் மிகப் பெரிய வணிகர்களுக்கு எட்டிப் பட்டம் வழங்கப் படுவதால் அவர் குமாரர் எட்டிக்குமாரர் என அழைப்பர். பண்டக் காவலர் விளக்கதின்று நீங்கி மேற்கில் செல்லுங்கால் மொழிபெயர்ப்போர் குடியும், அதைச் சூழ்ந்து மீனவர் குடியும் உள்ளன. ஒவ்வொரு துறையிலும் பண்டக் காவலர் விளக்கமும், மொழிபெயர்ப்போர் குடியும் காணப் படும். மீனவர் குடிக்கு அப்பால் மணல் பரப்பைத் தொடர்ந்து மீன் விலை உரைப்போர் விளக்கமும் இருக்கின்றன. தேர் அங்கு தான் நிறுத்தப் பட்டிருந்தது. மாற்சிம்மனும் இந்திரசேனனும் மணல்பரப்பில் மணல் பரப்பில் நடக்கத் தொடங்கிய போது ஞாயிறு ஞாழல் முகம் கண்டு மலர்ந்தது. ... (தொடரும்)...
* அருஞ்சொற்பொருள் விளக்கம்
திமில் - கட்டுமரம் போன்ற எளிமையான படகு
நறுவிரை - நறுமண மசாலா பொருட்கள் (spices)
கூலங்கள் - தானியங்கள்
ஓதங்கள் - ஆற்று நீர்மட்டமோ, கடல் நீர்மட்டமோ ஒன்றுக்கொன்று ஏறவோ இறங்கவோ செய்யும் போது அலையும் நீரோட்டம்.
ஞாழல் - நெய்தல் நிலத் தாவரம் (மரம், பூ)
படகு நறுவிரைத் துறையை அடைந்திருக்க வேண்டும். வாசனையால் கவரப்பட்டு இந்திரசேனனும் கரை நோக்கினான். நிறைமுகத் தீவில் பிற நாட்டு வணிகர்கள் வந்து விற்கும் பொருட்களுக்கு இணையாக புகாரின் பொருட்களும் விற்பனை ஆவதுண்டு. இங்கு வாங்கும் பொருட்களுக்கு வரி கிடையாது என்றாலும் தீவில் இருந்து வெளி செல்லும் பொது எடுத்துச் செல்லும் பொருட்களின் அளவு கட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றது. அவ்வளவை மீறும் போது தண்டல் வசூலிப்பதுண்டு. இந்த சந்தையில் வாணிபம் பெருமளவில் நடப்பதில்லை என்பதால் நாளுக்கு நாள் அங்காடிகள் குறைந்து கிடங்குகளாக மாறி வருகின்றன. இங்கிருந்து நறுவிரையோடன்றி, கூலங்கள், அகில், சந்தனம், பருத்தி மற்றும் எலி மயிரால் செய்த ஆடைகள், எனப் பலவும் ஏற்றுமதி ஆகின்றன. நகரின் விழாவில் நிறைமுகம் பங்கெடுக்க வில்லையோ எனும்படி தினப்படி வேலைகள் நடந்து கொண்டு இருந்தன. பண்டசாலை எனப்படும் கிடங்குகள் தீவின் நடுவில் இருந்தன, இவை வெளிநாட்டினர் வாங்கி வைக்கும் பொருட்களை சேமிக்க கிரயத்தில் விடப்படும். இது தவிர பயணியர் இளைப்பாற ஓங்குயர் மாடங்களும், தீவகச் சதுக்கமும், பூவிரும் மன்றமும் உள்ளன. இவற்றுள் மன்றமும் மாடங்களும் வணிகர் தங்குமிடங்களாகவும், சதுக்கம் சுமை தூக்குவோர், நாவாய் செலுத்துவோர், நாவாய்ப் பணியாளர் தங்குமிடங்களாகவும் செயல் படுகின்றன. அதற்கும் அப்பால் மீனவக் குடிகளும், தீவின் சிறு வியாபாரிகள் குடிகளும் உள்ளன.
படகு தீவில் இருந்து விலகி மருவூர்ப் பாக்கத்தின் கரையை நெருங்கிக் கொண்டிருந்தது. இளவேனிற்காலம் ஆனாலும் வற்றாத காவிரியின் ஓதங்கள் படகை அலைக்கழிக்க ஆரம்பித்திருந்தன. இந்திரசேனனையும் அழைத்துக் கொண்டு தரைதளத்துக்கு மாற்சிம்மன் விரைந்தான். படகைச் செலுத்துபவன் தன் திறமையால் நிதானமாக ஒழுங்குடன் செலுத்தினான். இந்த நீரலையில் தீவங்களை இணைத்து ஒரே தீவாய்ச் சமைத்த வல்லுனர்களின் திறன் போற்றுதற்குரியது. பௌர்ணமி மற்றும் அமாவாசையின் ஓதங்களின் போதும் மூழ்காத படிக்கு செய்தது அளப்பரிய சாதனை. பூம்புகாரின் வல்லுனர்களின் திறம் கண்டு பெருமை அடைந்தான் மாற்சிம்மன். ஒரு வழியாக ஓதங்களின் சுழலில் இருந்து தப்பித்து மீனவர் விளக்கத்தை நோக்கி படகு பயணித்தது. விளக்கத்திற்கு தென் திசையில் சிறுநாவாய் முதல் பெரும் மீன்பிடிப் படகுகள் அணிவகுத்து நின்றன. வடதிசையில் சிறு படகுகள், ஓடங்கள் மற்றும் திமில்கள் நிறுத்தப் பட்டு இருந்தன. இவற்றுள் ஓடங்கள் காவிரியின் எதிர் புனலில் சென்று பட்டினப் பாக்கத்தை அடையும் படி வடிவமைக்கப் பட்டவை. மாற்சிம்மன் எடுத்து வந்த படகு தென்திசை அடைய வேண்டும் என்றாலும் மீன் பிடிப்பதற்காக எடுத்துச் செல்லப் படாததால் பண்டக்காவலர் விளக்கத்தில் சென்று படகை ஒப்புவித்த பிறகே நிலையம் சேரலாம். மாற்சிம்மனும் இந்திரசேனனும் பண்டக்காவலர் விளக்கத்தில் இறங்கியதும் படகு நிலையம் சேர்ந்து விடும்.
பண்டக்காவலர் விளக்கத்தில் மாற்சிம்மனும் இந்திரசேனனும் இறங்கியதும், காவலர் தலைவர் "எட்டிக் குமாரருக்கு வந்தனம். பாக்கம் நீங்கிய யாண்டு வந்தவர் அறியாது மயங்கினன். பொறுத்தருள்க" என்றார். தீவகத்திற்கு படகு வேண்டும் என்று கோரிய போது எவர் என்று அறியாது சிறிய வசதி குறைவான படகே அளிக்கப் பட்டது, இப்பொழுது எப்படி எட்டிக் குமாரர் என்று அறிந்தார் எனத் தெரியவில்லை. பெருவணிகர் மக்கள் பரதகுமாரர் என அறியப்படுவார், அவரினும் மிகப் பெரிய வணிகர்களுக்கு எட்டிப் பட்டம் வழங்கப் படுவதால் அவர் குமாரர் எட்டிக்குமாரர் என அழைப்பர். பண்டக் காவலர் விளக்கதின்று நீங்கி மேற்கில் செல்லுங்கால் மொழிபெயர்ப்போர் குடியும், அதைச் சூழ்ந்து மீனவர் குடியும் உள்ளன. ஒவ்வொரு துறையிலும் பண்டக் காவலர் விளக்கமும், மொழிபெயர்ப்போர் குடியும் காணப் படும். மீனவர் குடிக்கு அப்பால் மணல் பரப்பைத் தொடர்ந்து மீன் விலை உரைப்போர் விளக்கமும் இருக்கின்றன. தேர் அங்கு தான் நிறுத்தப் பட்டிருந்தது. மாற்சிம்மனும் இந்திரசேனனும் மணல்பரப்பில் மணல் பரப்பில் நடக்கத் தொடங்கிய போது ஞாயிறு ஞாழல் முகம் கண்டு மலர்ந்தது. ... (தொடரும்)...
* அருஞ்சொற்பொருள் விளக்கம்
திமில் - கட்டுமரம் போன்ற எளிமையான படகு
நறுவிரை - நறுமண மசாலா பொருட்கள் (spices)
கூலங்கள் - தானியங்கள்
ஓதங்கள் - ஆற்று நீர்மட்டமோ, கடல் நீர்மட்டமோ ஒன்றுக்கொன்று ஏறவோ இறங்கவோ செய்யும் போது அலையும் நீரோட்டம்.
ஞாழல் - நெய்தல் நிலத் தாவரம் (மரம், பூ)
Monday, January 25, 2010
இங்கொரு விழாத் தொடக்கம் - 3
வெயிலோனின் முதல் கரணம் மண்ணைத் தொட்டதும் அங்கம் எங்கும் வெட்கம் பரவ நிலம் சிவந்தாள் பூமி. ஒவ்வொரு முறைத் தொடும் போதும் முதல் முறைத் தொடும் கன்னி போல் சிவப்பதால் என்னவோ பூமியை ஒரு நாள் கூட மலடியாய் விட்டதில்லை கதிரவன். அவன் தரும் மக்கட் செல்வங்களுக்கு எனவே அவன் வரும் நேரம் வரை தன்னை அலங்கரித்து அவனைக் கண்டதும் முகம் மலர்ந்து பிரகாசமாய் சிரிக்கிறாள். அந்த அன்னையின் முலைப்பால் குடித்துப் பெருகியவன் சமுத்திரராஜன், ஆனால் அவன் அந்த முலையைத் தொட்டதும் இல்லை கண்டதும் இல்லை. பால் குடிக்க தெரியாத தன் குழந்தைக்கு குழல் கொண்டு பீய்ச்சிப் புகட்டும் தாய் போல் நதியாய் அவன் வாயில் விழுந்து கொண்டே இருக்கும் படி செய்தாள். பால் வாய் புகும் இடம் தான் இந்த படகுத் துறை. அன்றும் தன் கிழத்தி பாலூட்டும் அழகைக் கண்டு பூரித்து நின்றான் கதிரவன், அதனால் தானோ என்னவோ அந்த நிமிடம் நீண்டு இருந்தது. பிள்ளைக்கு அமுதூட்டும் அன்னையை மாற்றான் கண் கொண்டு காண்பது தவறு என்று எண்ணினார்களோ என்னவோ படகுக்காரர்களோ, பயணிகளோ அல்லது வியாபாரிகளோ தங்கள் காரியத்தில் கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள்.
விளைவு, படகு காலியாக நின்றது இந்திரசேனனைத் தவிர. எத்தனை மூடைகள் எல்லாம் எங்கே இருந்தன? "வருக இந்திரசேனரே! கணவனின் கரம் பட்டு சிவந்து நிற்கும் தாயின் மடியில் கால் பதிக்கும் இளம் மகவாகுக. தாய்மை கடனுணர்ந்து தாய் இயநிலை ஏகுவள்". புதியவன் புன்னகை பூத்திருந்தான். "வியன்கொளல் வேண்டா. உதயம் காண் புத்தோர் நிலை கண்டுளம். நிறைமுகம் காண பொன்னி தனித்தாளிலை மாற்சிம்மனும் வந்துளம். மால் சிம்மன். " கால் பதித்தான். செம்மை நீங்கி மஞ்சள் பூசினாள். "கண்டீர்.. இயநிலை ஏகினள்." "வணக்கம்" என்றான். 'இவனுக்குப் புரியுமா?'. "முகமனுக்கு நன்றி. வணங்குதல் இறைவற்கே உரித்தாம். நிமதும் உரித்தாகுக." 'இதற்கும் ஒரு விளக்கம். பேசுவதற்கே ஒத்திகை பார்க்க வேண்டும் போல் உள்ளதே. எதுவும் பேச வேண்டாம் இல்லை இல்லை பேசற்க'..
கடல் நடந்து நிலம் பதித்ததும், "இந்திரசேனரே! சம்புத்தீபத்தின் முறைமைப் படி விருந்து எதிர்கொள்வம். நாவற்தழை அணிசெய் தாழைப்பாகையும், அடம்ப ஆரமும் ஏற்றுக்கொள்வீர்" என்றபடியே ஒரு மாலையும், ஒரு தொப்பியும் அணிவித்தான். அந்நேரம் எதோ ஒரு மேல சத்தம் கேட்டது. "நாவாய் பம்பை, திணையோன் கடலோனுக்கு வணக்கம் கூறி விழா தொடங்குதல் மரபு. தொடரும் வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம்." 'இந்திர விழா தொடங்குகிறது போலும்' இதுதான் இந்திர சேனனுக்கு புரிந்தது. அவன் மனம் படகுத் துறையில் உள்ள சந்தையில் லயித்தது. ஒருவன் குழல் ஒன்றில் இருந்து பாடல் ஒன்றை இசைத்துக் கொண்டு இருந்தான். வெளிநாட்டினர் அவனைச் சூழ்ந்து இசையில் லயித்திருந்தனர். வாசித்தது பூபாளத்தை ஒத்திருந்தது. "இவன் ஊரன், அது மருத யாழ்" என்றான் மால் சிம்மன்.
அருகில் உப்பு, சிப்பி, மீன், முத்துக்கள் என வியாபாரம் நடந்து கொண்டு இருந்தது. மீன் உணவுகள் சுடச் சுட பரிமாறப் பட்டன. முரசம் ஒலித்த பொழுது மட்டும் திசை நோக்கி வணங்கி விட்டு அவரவர் வேலையில் ஈடுபட்டனர். சிறிய சந்தை அது. தொலைவில் மீன்கள் காய்ந்து கொண்டு இருந்தன. அருகில் மீன்பிடி படகுகள் நிறுத்தப் பட்டு இருந்தன. மாற்சிம்மனும் ஒவ்வொன்றுக்கும் எதோ பெயர் சொல்லிக்கொண்டே வந்தான். "அவர்கள் பரதவர், அந்தப் படகுகள் திமில் என அறியப்படும். பெரும்பாலான பரதவர் மருவூர்த் துறையில் வசிக்கின்றனர்" என்பது அவன் சொன்னதன் சுருக்கம். "புலரியில் தொடங்கினம். பரதவர் கடலேகும் காலமாம், நெருங்கி கரை சேர்வாம்" என்றான். படகுத் துறைக்குச் சென்றோம். எங்கள் இருவர் தவிர இன்னும் நால்வர் மட்டும் இருந்தனர். ஆறு பேருக்கு ரொம்பவே பெரிய படகு அது. படகின் மேல் தளத்தில் இருந்த இருக்கைகளில் அமர்ந்தோம். சூரியனை நோக்கி சென்ற படகு சிறிது நிதானித்து தெற்கு பின் மேற்கு என நகர்ந்தது.. (தொடரும்) ..........
விளைவு, படகு காலியாக நின்றது இந்திரசேனனைத் தவிர. எத்தனை மூடைகள் எல்லாம் எங்கே இருந்தன? "வருக இந்திரசேனரே! கணவனின் கரம் பட்டு சிவந்து நிற்கும் தாயின் மடியில் கால் பதிக்கும் இளம் மகவாகுக. தாய்மை கடனுணர்ந்து தாய் இயநிலை ஏகுவள்". புதியவன் புன்னகை பூத்திருந்தான். "வியன்கொளல் வேண்டா. உதயம் காண் புத்தோர் நிலை கண்டுளம். நிறைமுகம் காண பொன்னி தனித்தாளிலை மாற்சிம்மனும் வந்துளம். மால் சிம்மன். " கால் பதித்தான். செம்மை நீங்கி மஞ்சள் பூசினாள். "கண்டீர்.. இயநிலை ஏகினள்." "வணக்கம்" என்றான். 'இவனுக்குப் புரியுமா?'. "முகமனுக்கு நன்றி. வணங்குதல் இறைவற்கே உரித்தாம். நிமதும் உரித்தாகுக." 'இதற்கும் ஒரு விளக்கம். பேசுவதற்கே ஒத்திகை பார்க்க வேண்டும் போல் உள்ளதே. எதுவும் பேச வேண்டாம் இல்லை இல்லை பேசற்க'..
கடல் நடந்து நிலம் பதித்ததும், "இந்திரசேனரே! சம்புத்தீபத்தின் முறைமைப் படி விருந்து எதிர்கொள்வம். நாவற்தழை அணிசெய் தாழைப்பாகையும், அடம்ப ஆரமும் ஏற்றுக்கொள்வீர்" என்றபடியே ஒரு மாலையும், ஒரு தொப்பியும் அணிவித்தான். அந்நேரம் எதோ ஒரு மேல சத்தம் கேட்டது. "நாவாய் பம்பை, திணையோன் கடலோனுக்கு வணக்கம் கூறி விழா தொடங்குதல் மரபு. தொடரும் வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம்." 'இந்திர விழா தொடங்குகிறது போலும்' இதுதான் இந்திர சேனனுக்கு புரிந்தது. அவன் மனம் படகுத் துறையில் உள்ள சந்தையில் லயித்தது. ஒருவன் குழல் ஒன்றில் இருந்து பாடல் ஒன்றை இசைத்துக் கொண்டு இருந்தான். வெளிநாட்டினர் அவனைச் சூழ்ந்து இசையில் லயித்திருந்தனர். வாசித்தது பூபாளத்தை ஒத்திருந்தது. "இவன் ஊரன், அது மருத யாழ்" என்றான் மால் சிம்மன்.
அருகில் உப்பு, சிப்பி, மீன், முத்துக்கள் என வியாபாரம் நடந்து கொண்டு இருந்தது. மீன் உணவுகள் சுடச் சுட பரிமாறப் பட்டன. முரசம் ஒலித்த பொழுது மட்டும் திசை நோக்கி வணங்கி விட்டு அவரவர் வேலையில் ஈடுபட்டனர். சிறிய சந்தை அது. தொலைவில் மீன்கள் காய்ந்து கொண்டு இருந்தன. அருகில் மீன்பிடி படகுகள் நிறுத்தப் பட்டு இருந்தன. மாற்சிம்மனும் ஒவ்வொன்றுக்கும் எதோ பெயர் சொல்லிக்கொண்டே வந்தான். "அவர்கள் பரதவர், அந்தப் படகுகள் திமில் என அறியப்படும். பெரும்பாலான பரதவர் மருவூர்த் துறையில் வசிக்கின்றனர்" என்பது அவன் சொன்னதன் சுருக்கம். "புலரியில் தொடங்கினம். பரதவர் கடலேகும் காலமாம், நெருங்கி கரை சேர்வாம்" என்றான். படகுத் துறைக்குச் சென்றோம். எங்கள் இருவர் தவிர இன்னும் நால்வர் மட்டும் இருந்தனர். ஆறு பேருக்கு ரொம்பவே பெரிய படகு அது. படகின் மேல் தளத்தில் இருந்த இருக்கைகளில் அமர்ந்தோம். சூரியனை நோக்கி சென்ற படகு சிறிது நிதானித்து தெற்கு பின் மேற்கு என நகர்ந்தது.. (தொடரும்) ..........
Sunday, January 10, 2010
இங்கொரு விழாத் தொடக்கம் - 2
மாற்சிம்மன் கழிமுகத்தீவிற்கு இது முதல் முறை அல்ல என்றாலும், இம்முறை வந்திருப்பதன் நோக்கம் சாமானியம் ஆனது அல்ல என்பதால், தீவே புதியதாய் தோற்றம் அளித்தது. முதல் ஜாமத்திலேயே தந்தையாரால் எழுப்பப்பட்டதும், பின் அவரது தனி ரதத்தில் பட்டினப்பாக்கத்திலிருந்து மருவூர்பாக்கம் படகுத் துறையை அடைந்ததும் சில கணங்களில் நடந்தது போல் இருந்தது. இதோ படகு இன்னும் அரை நாழிகையில் கழிமுகத்தீவை அடைந்துவிடும். இப்பொழுதே தீவின் பிரமாண்டம் படிப்படியாக குறையத் தொடங்கி இருந்தது. பஞ்சபூதங்களுள் வெளியும் நிலனும் அருகாமையில் அதன் பிரமாண்டத்தை குறைத்துக் கொள்கின்றன. நீரும் காற்றும் இதற்கு எதிரணி. நெருப்பு என்றுமே தன்னை குறைத்தும் கூட்டியும் காட்டியதில்லை. புதியவர் அதிலும் முக்கியமானவர் வருகிறார் என்றால் தந்தை தானே நிறைமுகம் சென்று வரவேற்பது தான் வழக்கம். நகரவழக்கு கழிமுகம் என்றாலும் கூட தந்தை ஒரு போதும் கழிமுகம் என்று கூறியதில்லை. அதை நிறைமுகம் எனக்கூறி அதற்கு 'இடக்கரடக்கல்' என்று இலக்கணக் குறிப்பும் கொடுப்பார். காவிரி கடலில் கழிவதில்லை எனவும் அங்கு சென்று நிறைவதாகவும் கூறுவார். மேலும் விருந்தினர் விடைபெறும் இடத்திற்கு கழிமுகம் என்ற பெயர் வைப்பது விருந்தோம்பலுக்கு எதிரானது. விருந்தினரை நிறைமுகதுடன் வரவேற்பதாலும், நிறைமுகதுடன் விடையளிப்பதாலும் அத்தீவிற்கு 'நிறைமுகக்காயல்' என்பதே சாலச் சிறந்த பெயர் என்பது அவர் வாதம்.
தந்தையோ பட்டினப்பாக்கத்தில் வசிக்கும் பெருவணிகர்களில் முன்னவர். அவரது வர்த்தகங்கள் எல்லாம் புகார் துறைமுகத்தில் தான் நடக்கும். நிறைமுகத்தீவுத் துறையோ சிறு வணிகர் வந்திறங்கும் இடம். இங்கு அவர் வாணிப நிமித்தமாக வர சாத்தியமில்லை. ஆயினும் அவர் புகார்த்துறைக்கு சென்றதை விட நிறைமுகத்துறைக்கு சென்றது தான் அதிகம். அங்கிருந்து அவர் அழைத்து வரும் நபர்களுடன் ஏதோ ஒரு பரிமொழியில் பேசிக்கொள்வார். அதன் பெயர் மதுரமொழி என்பதும், 'அழியாப்புலம், புரந்தரன், மகா, மாயர்கள், மதுரர்கள்' ஆகிய பெயர்கள் அதிகம் அடிபடும் என்பது மட்டுமே தெரியும். இவர்களில் புரந்தரன் என்பவர் தந்தையின் நெருங்கிய நண்பர். பல முறை அவரைப் பார்த்தும் இருக்கிறான். அவருக்கு முதன்மை வீதியில் ஒரு பெரிய மாளிகை இருந்தும் எப்பொழுது வந்தாலும் அவர்கள் வீட்டில் தான் தங்குவார். அவரது மாளிகையில் வேலையாட்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதால் தந்தையார் தான் அவரை அங்கு செல்ல விட்டதில்லை. நேற்று முன்பகல் ஒரு பெரிய அம்மாள் அந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து அந்த வீட்டில் பற்பல வேலைகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. நேற்று முன்னிரவு வரை தந்தை அங்கிருந்து தானே முன் நின்று வேலையை மேற்பார்வை இட்டார். வழக்கமாக பெரியகருப்பர் தான் இது போன்ற வேலைகளை பார்த்துக் கொள்வார். ஆனால் தந்தை தானே முன்னின்று கவனிப்பது ஆச்சர்யம் அளித்தது. அதுமட்டும் அல்லாமல் அந்த அம்மாளை வரவேற்க தாயாரையும் நிறைமுகத்தீவிற்கு நேற்று அழைத்துச் சென்றது, அவர்கள் பெண் என்பதால் நடந்த ஏற்பாடு என்று நினைத்தவனுக்கு தந்தையின் இந்த அக்கறை அந்த அம்மாள் ஏதோ முக்கியமானவர் என்று அவனுக்கு உணர்த்திற்று.
இன்று காலை வரை அந்த அம்மாள் தான் முக்கியமானவர் என்று நினைத்துக் கொண்டு இருந்தவனுக்கு இந்த தடபுடல் எல்லாம் வரவிருக்கும் ஒரு இளைஞனுக்கு என்றவுடன் அவனைக் காணும் ஆவலுடன் அவன் யார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலும் அதிகம் ஆயிற்று. தந்தையின் தனி ரதம் ஒன்றும் சாமானியம் அல்லவே. அதில் அமர்ந்து செல்வதற்கே ஒரு தனித் தகுதி வேண்டுமே. உண்மையில் அவன் அமர்வதே இது தான் முதன்முறை. அவர் கூறியதின் சாராம்சம் இதுதான் "இந்திரசேனன் என்னும் இளைஞன் நிறைமுகத்தீவின் சீன யவனர் படகுத் துறைக்கு வருவான். அவன் புரந்தரனுக்கு இளவல், அவ்வம்மையாரின் புதல்வன். அவன் உரோமாபுரி குருகுல வாசத்திலிருந்து வருகின்றான். அவனை அனைத்து மரியாதைகளுடன் அழைத்து வர வேண்டும்." இவ்வளவு தான். சரி உரோமாபுரி மேற்கில் இருக்கிறது, சீனமோ கிழக்கில் இருக்கிறது, இவன் ஏன் சீனப் படகுத் துறைக்கு வருகிறான். மேலும் அந்த அம்மையார் புரந்தரனின் தாயார் என்பதும் அவனுக்கு புது தகவல். நேற்று முன்னிரவு வரை ஏற்பட்ட களைப்பினால் தான் அவர் தன்னை அனுப்புவதாக முதலில் எண்ணினான். ஆனால் அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது, அவனின் வயதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
அவன் சீனப் படகுத்துறைக்கு வந்த போது கரையில் சிறு கடைகள் திறக்கப்பட்டு கொண்டிருந்தன. வழக்கமாக காணப்படும் பல கடைகள் மறைந்திருந்தன. இந்திரவிழாவின் காரணமாய் கடையை நகருக்குள் திறந்திருக்கலாம். கடைகள் குறைவு எனினும் வணிகர்கள் அதிகமாய் வரும் பொருளுக்காக காத்திருந்தனர். அதிலும் சீனம் தான் கற்பூரம், மூலிகைகள், வாசனையூட்டும் பொருட்கள் எல்லாவற்றிலும் ஏற்றுமதியில் முதலிடம். விழாக் காலங்களில் இவற்றுக்கு ஏற்படும் தேவை அதிகம் என்பதால் சீன வணிகர்கள் வரத்தும் சமீப காலங்களில் அதிகரித்து இருந்தது. ஆனால் தேவை அதிகம் என்பதால் இவற்றின் விலை விண்ணை எட்டுவது ஒவ்வொரு விழாவின் போதும் நடப்பதே. சில வணிகர்கள் அதிக இலாபம் ஈட்டும் நோக்குடன் நேரடிக் கொள்முதல் செய்ய இங்கு வந்திருப்பது இயல்பு என்றே பட்டது. அந்தக் கூட்டம் சலசலப்பின்றி இருப்பதில் இருந்து இன்னும் படகு வரவில்லை என்று தெரிந்தது. தந்தை அளித்த சித்திரத்தை எடுத்து நோக்கினான். எந்தச் சித்திரக்காரன் எனத் தெரியவில்லை, இந்த அளவிற்கு தத்ரூபமாக வரையும் சித்திரக்காரன் புகாரில் நிச்சயம் இல்லை. மேலும் இது சித்திரம் என்பதை விட அவனின் நிழல் அல்லது நகல் எனும்படி இருந்தது. தவிரவும் சீனத்திலோ, பாரசீகத்திலோ இத்தகைய காகிதங்கள் நிச்சயம் இல்லை. வளவளப்பாய் இருந்தது. சித்திரத்தை மனதில் இருத்திக் கொண்டான். சலசலப்பு ஏற்பட்டது. படகு வந்து கொண்டிருக்கவேண்டும். நிமிர்ந்து நோக்கினான்.. ஒரு படகு சீனக் கொடியுடன் வந்து கொண்டு இருந்தது. ... (தொடரும்) ....
தந்தையோ பட்டினப்பாக்கத்தில் வசிக்கும் பெருவணிகர்களில் முன்னவர். அவரது வர்த்தகங்கள் எல்லாம் புகார் துறைமுகத்தில் தான் நடக்கும். நிறைமுகத்தீவுத் துறையோ சிறு வணிகர் வந்திறங்கும் இடம். இங்கு அவர் வாணிப நிமித்தமாக வர சாத்தியமில்லை. ஆயினும் அவர் புகார்த்துறைக்கு சென்றதை விட நிறைமுகத்துறைக்கு சென்றது தான் அதிகம். அங்கிருந்து அவர் அழைத்து வரும் நபர்களுடன் ஏதோ ஒரு பரிமொழியில் பேசிக்கொள்வார். அதன் பெயர் மதுரமொழி என்பதும், 'அழியாப்புலம், புரந்தரன், மகா, மாயர்கள், மதுரர்கள்' ஆகிய பெயர்கள் அதிகம் அடிபடும் என்பது மட்டுமே தெரியும். இவர்களில் புரந்தரன் என்பவர் தந்தையின் நெருங்கிய நண்பர். பல முறை அவரைப் பார்த்தும் இருக்கிறான். அவருக்கு முதன்மை வீதியில் ஒரு பெரிய மாளிகை இருந்தும் எப்பொழுது வந்தாலும் அவர்கள் வீட்டில் தான் தங்குவார். அவரது மாளிகையில் வேலையாட்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதால் தந்தையார் தான் அவரை அங்கு செல்ல விட்டதில்லை. நேற்று முன்பகல் ஒரு பெரிய அம்மாள் அந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து அந்த வீட்டில் பற்பல வேலைகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. நேற்று முன்னிரவு வரை தந்தை அங்கிருந்து தானே முன் நின்று வேலையை மேற்பார்வை இட்டார். வழக்கமாக பெரியகருப்பர் தான் இது போன்ற வேலைகளை பார்த்துக் கொள்வார். ஆனால் தந்தை தானே முன்னின்று கவனிப்பது ஆச்சர்யம் அளித்தது. அதுமட்டும் அல்லாமல் அந்த அம்மாளை வரவேற்க தாயாரையும் நிறைமுகத்தீவிற்கு நேற்று அழைத்துச் சென்றது, அவர்கள் பெண் என்பதால் நடந்த ஏற்பாடு என்று நினைத்தவனுக்கு தந்தையின் இந்த அக்கறை அந்த அம்மாள் ஏதோ முக்கியமானவர் என்று அவனுக்கு உணர்த்திற்று.
இன்று காலை வரை அந்த அம்மாள் தான் முக்கியமானவர் என்று நினைத்துக் கொண்டு இருந்தவனுக்கு இந்த தடபுடல் எல்லாம் வரவிருக்கும் ஒரு இளைஞனுக்கு என்றவுடன் அவனைக் காணும் ஆவலுடன் அவன் யார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலும் அதிகம் ஆயிற்று. தந்தையின் தனி ரதம் ஒன்றும் சாமானியம் அல்லவே. அதில் அமர்ந்து செல்வதற்கே ஒரு தனித் தகுதி வேண்டுமே. உண்மையில் அவன் அமர்வதே இது தான் முதன்முறை. அவர் கூறியதின் சாராம்சம் இதுதான் "இந்திரசேனன் என்னும் இளைஞன் நிறைமுகத்தீவின் சீன யவனர் படகுத் துறைக்கு வருவான். அவன் புரந்தரனுக்கு இளவல், அவ்வம்மையாரின் புதல்வன். அவன் உரோமாபுரி குருகுல வாசத்திலிருந்து வருகின்றான். அவனை அனைத்து மரியாதைகளுடன் அழைத்து வர வேண்டும்." இவ்வளவு தான். சரி உரோமாபுரி மேற்கில் இருக்கிறது, சீனமோ கிழக்கில் இருக்கிறது, இவன் ஏன் சீனப் படகுத் துறைக்கு வருகிறான். மேலும் அந்த அம்மையார் புரந்தரனின் தாயார் என்பதும் அவனுக்கு புது தகவல். நேற்று முன்னிரவு வரை ஏற்பட்ட களைப்பினால் தான் அவர் தன்னை அனுப்புவதாக முதலில் எண்ணினான். ஆனால் அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது, அவனின் வயதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
அவன் சீனப் படகுத்துறைக்கு வந்த போது கரையில் சிறு கடைகள் திறக்கப்பட்டு கொண்டிருந்தன. வழக்கமாக காணப்படும் பல கடைகள் மறைந்திருந்தன. இந்திரவிழாவின் காரணமாய் கடையை நகருக்குள் திறந்திருக்கலாம். கடைகள் குறைவு எனினும் வணிகர்கள் அதிகமாய் வரும் பொருளுக்காக காத்திருந்தனர். அதிலும் சீனம் தான் கற்பூரம், மூலிகைகள், வாசனையூட்டும் பொருட்கள் எல்லாவற்றிலும் ஏற்றுமதியில் முதலிடம். விழாக் காலங்களில் இவற்றுக்கு ஏற்படும் தேவை அதிகம் என்பதால் சீன வணிகர்கள் வரத்தும் சமீப காலங்களில் அதிகரித்து இருந்தது. ஆனால் தேவை அதிகம் என்பதால் இவற்றின் விலை விண்ணை எட்டுவது ஒவ்வொரு விழாவின் போதும் நடப்பதே. சில வணிகர்கள் அதிக இலாபம் ஈட்டும் நோக்குடன் நேரடிக் கொள்முதல் செய்ய இங்கு வந்திருப்பது இயல்பு என்றே பட்டது. அந்தக் கூட்டம் சலசலப்பின்றி இருப்பதில் இருந்து இன்னும் படகு வரவில்லை என்று தெரிந்தது. தந்தை அளித்த சித்திரத்தை எடுத்து நோக்கினான். எந்தச் சித்திரக்காரன் எனத் தெரியவில்லை, இந்த அளவிற்கு தத்ரூபமாக வரையும் சித்திரக்காரன் புகாரில் நிச்சயம் இல்லை. மேலும் இது சித்திரம் என்பதை விட அவனின் நிழல் அல்லது நகல் எனும்படி இருந்தது. தவிரவும் சீனத்திலோ, பாரசீகத்திலோ இத்தகைய காகிதங்கள் நிச்சயம் இல்லை. வளவளப்பாய் இருந்தது. சித்திரத்தை மனதில் இருத்திக் கொண்டான். சலசலப்பு ஏற்பட்டது. படகு வந்து கொண்டிருக்கவேண்டும். நிமிர்ந்து நோக்கினான்.. ஒரு படகு சீனக் கொடியுடன் வந்து கொண்டு இருந்தது. ... (தொடரும்) ....
Monday, January 4, 2010
இங்கொரு விழாத் தொடக்கம் - 1
எதிர்பாராமல் தள்ளப் பட்ட இந்திரசேனன் சுதாரித்த போது ஒரு படகில் கடலில் போய்க் கொண்டு இருந்தான். விடிவதற்கு இன்னும் சில நேரங்களே இருக்கும். வெள்ளி முளைத்திருந்தது. அவனுடன் இன்னும் பல வணிகர்கள், அரச குடும்பத்தினர், பாமரர்களும் படகில் இருந்தனர். மார்கழி மாதத்தின் முன் பனி தன் பணியை செவ்வனே செய்தது. கைகளை தண்ணீருக்குள் வைத்தான், சற்றே வெது வெதுப்பாய் இருந்தது. பயணிகளில் பலர் அரை உறக்கத்தில் இருந்தனர். பெரும்பாலனவர்களிடம் பயணச் சுமை என்று எதுவும் இல்லை. வைத்திருந்தவர்களும் ஓரிரு மூடைகள் மட்டுமே வைத்திருந்தனர். படகில் இருவர் துடுப்பு வலித்துக் கொண்டு இருந்தனர்.
"விஷயம் தெரியுமா? மஹா அழியாப்புலத்திற்கு நேற்றிரவு வந்து விட்டாராம். மன்னர் புரந்தரன் அவரை நேரே சென்று வரவேற்று உபசரித்தாராம்." யாரோ ஒரு யவனர் பேசிக் கொண்டு இருந்தார். "மெதுவாகப் பேசு. யாரேனும் கேட்டால் விபரீதமாகி விடும். உனக்கு எப்படி இது தெரியும்" மற்றொரு யவனர். "மதுர மொழி தெரிந்தவர் யாரும் இங்கு இருக்க வாய்ப்பில்லை. பயம் வேண்டாம். நீயும் மதுர மொழியிலேயே பதிலளி. இங்கு வர அழியாப்புலம் விண்வெளி நிலையத்தில் காத்திருந்த போது புரந்தரனிடம் வேலையில் இருக்கும் என் உறவினனைச் சந்தித்தேன். அவன் தான் கூறினான்." 'ஓஹோ புரந்தரன் பேசிய மொழி மதுர மொழியா' ... "மகாவிற்கு மதுரமொழி தெரிந்ததால் சில வினாடிகளிலேயே அவர்கள் சந்திப்பு நிறைவடைந்து விட்டதாம். அதன் பின் என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியவில்லை." "மிக அதிக வேகத்தில் வார்த்தைப் பிரயோகம் உள்ள மொழி மதுர மொழி என்பது தெரிந்ததாயிற்றே. அதனால் தானே அதற்க்கு இத்தனை பெயரும் புகழும். மேலும் என்ன கூறினான் உன் உறவினன்?" 'அதனால் தான் கதையை சில நொடிகளில் முடிக்க முடிந்ததா?'
"ஏதோ ஒரு பெண்ணின் சடலம் விண்கலத்தில் கிடைத்ததாகவும் அது பற்றியே அவர்கள் உரையாடல் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறானாம். மஹா வந்த செய்தி மட்டுமே ஊடகத் துறைக்கு தெரிவிக்கப் பட்டுள்ளதாம். வேறு எதுவும் இப்பொழுது வெளியிடும் எண்ணம் இல்லையாம்." "இப்பொழுது எங்கு இருக்கிறார் மகா?" "தெரியவில்லை". "சரி இதோடு விட்டு விடுவோம். நீங்கள் முதல் முறை புகார் வருகிறீர் அல்லவா. வியப்பில் வாயடைத்துப் போகப் போகிறீர்." "அப்படியா.. இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும் உங்கள் புகார் நகரம்." "அடத்தம்பி.. விடிவதக்குள் கழிமுகத்தீவை அடைந்து விடுவோம். இந்தத் தீவு காவிரி கடலோடு கலக்கும் கழிமுகத்தில் இருக்கும் ஒரு காயல் பிரதேசம். கழிமுகத்தில் உள்ள எல்லா தீவுகளையும் மரப் பாலங்களால் இணைத்து ஒரே தீவாக மாற்றியிருக்கிறார்கள் புகார் வாசிகள். இந்த மரப்பாலங்கள் அல்லாது படகுகளும் தீவுக் கூட்டங்களை ஒன்றிணைக்கின்றன.
புகார் நகருக்கு வடபுறம் அலையாத்திக் காடுகளும், தெற்க்கே மணல் குன்றங்களும் இருக்கின்றன. இவற்றுக்கு இடையில் கரையில் இருந்து சுமார் 15 கல் தொலைவிற்கு இந்த தீவுக் கூட்டங்கள் பரந்து கிடைக்கின்றன. யவனர்களுக்கு என்றே உருவாக்கப் பட்ட இந்த தீவு மருவூர்ப்பாக்கத்துடன் அதிவேகப் படகுகளால் இணைக்கப் பட்டுள்ளது. இங்கிருந்து நகரத்துக்கு செல்ல நகர நாயகரின் அனுமதி பெற்றே செல்ல முடியும். இந்தத்தீவில் நடக்கும் அனைத்து கொடுக்கல் வாங்கல் விவகாரங்களுக்கு சுங்கம் வசூலிப்பதில்லை. பன்னாட்டு வணிகர்களின் வரவை ஊக்குவிக்கவே இந்த ஏற்பாடு. உள்ளூர் வணிகர்கள் சுங்கம் செலுத்தி நகருக்கு கொண்டு செல்வர்.
வெளி நாட்டு பயணிகள் முதலில் இறங்குவது இந்த தீவில் தான். மக்கள் போக்குவரத்து கண்காணிப்பாளர் மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் அனுமதி பெற்ற பின் தனி படகில் நகரத்திற்கு கொண்டு செல்லப் படுவர். நாம் கழிமுகத் தீவை நெருங்கி விட்டோம் என்று தெரிகிறது." "ஆம் ஏதோ ஒரு கரை தெரிகிறது". மிக அருகில் சற்றே ஆரவாரமிக்க கடற்கரை தென்பட்டது. சிறு வியாபாரிகள் படகை எதிர் நோக்கி காத்திருந்தார்கள். துடுப்புகள் அல்லாது அலைகளும் படகை கரையில் கொண்டு சேர்க்க துணை வந்தன. படகோட்டி படகில் இருந்து சிறு வடம் ஒன்றை கரையில் எறிந்தான். சூரியன் எழ இன்னும் நேரம் ஆகும் என்று தெரிந்தது. படகோட்டிகள் கடலில் இறங்கி படகை தள்ளினர். வியாபாரிகள் மற்றும் சுமை தூக்குவோர் படகை சூழ்ந்து கொண்டனர்.... (தொடரும்)...
"விஷயம் தெரியுமா? மஹா அழியாப்புலத்திற்கு நேற்றிரவு வந்து விட்டாராம். மன்னர் புரந்தரன் அவரை நேரே சென்று வரவேற்று உபசரித்தாராம்." யாரோ ஒரு யவனர் பேசிக் கொண்டு இருந்தார். "மெதுவாகப் பேசு. யாரேனும் கேட்டால் விபரீதமாகி விடும். உனக்கு எப்படி இது தெரியும்" மற்றொரு யவனர். "மதுர மொழி தெரிந்தவர் யாரும் இங்கு இருக்க வாய்ப்பில்லை. பயம் வேண்டாம். நீயும் மதுர மொழியிலேயே பதிலளி. இங்கு வர அழியாப்புலம் விண்வெளி நிலையத்தில் காத்திருந்த போது புரந்தரனிடம் வேலையில் இருக்கும் என் உறவினனைச் சந்தித்தேன். அவன் தான் கூறினான்." 'ஓஹோ புரந்தரன் பேசிய மொழி மதுர மொழியா' ... "மகாவிற்கு மதுரமொழி தெரிந்ததால் சில வினாடிகளிலேயே அவர்கள் சந்திப்பு நிறைவடைந்து விட்டதாம். அதன் பின் என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியவில்லை." "மிக அதிக வேகத்தில் வார்த்தைப் பிரயோகம் உள்ள மொழி மதுர மொழி என்பது தெரிந்ததாயிற்றே. அதனால் தானே அதற்க்கு இத்தனை பெயரும் புகழும். மேலும் என்ன கூறினான் உன் உறவினன்?" 'அதனால் தான் கதையை சில நொடிகளில் முடிக்க முடிந்ததா?'
"ஏதோ ஒரு பெண்ணின் சடலம் விண்கலத்தில் கிடைத்ததாகவும் அது பற்றியே அவர்கள் உரையாடல் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறானாம். மஹா வந்த செய்தி மட்டுமே ஊடகத் துறைக்கு தெரிவிக்கப் பட்டுள்ளதாம். வேறு எதுவும் இப்பொழுது வெளியிடும் எண்ணம் இல்லையாம்." "இப்பொழுது எங்கு இருக்கிறார் மகா?" "தெரியவில்லை". "சரி இதோடு விட்டு விடுவோம். நீங்கள் முதல் முறை புகார் வருகிறீர் அல்லவா. வியப்பில் வாயடைத்துப் போகப் போகிறீர்." "அப்படியா.. இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும் உங்கள் புகார் நகரம்." "அடத்தம்பி.. விடிவதக்குள் கழிமுகத்தீவை அடைந்து விடுவோம். இந்தத் தீவு காவிரி கடலோடு கலக்கும் கழிமுகத்தில் இருக்கும் ஒரு காயல் பிரதேசம். கழிமுகத்தில் உள்ள எல்லா தீவுகளையும் மரப் பாலங்களால் இணைத்து ஒரே தீவாக மாற்றியிருக்கிறார்கள் புகார் வாசிகள். இந்த மரப்பாலங்கள் அல்லாது படகுகளும் தீவுக் கூட்டங்களை ஒன்றிணைக்கின்றன.
புகார் நகருக்கு வடபுறம் அலையாத்திக் காடுகளும், தெற்க்கே மணல் குன்றங்களும் இருக்கின்றன. இவற்றுக்கு இடையில் கரையில் இருந்து சுமார் 15 கல் தொலைவிற்கு இந்த தீவுக் கூட்டங்கள் பரந்து கிடைக்கின்றன. யவனர்களுக்கு என்றே உருவாக்கப் பட்ட இந்த தீவு மருவூர்ப்பாக்கத்துடன் அதிவேகப் படகுகளால் இணைக்கப் பட்டுள்ளது. இங்கிருந்து நகரத்துக்கு செல்ல நகர நாயகரின் அனுமதி பெற்றே செல்ல முடியும். இந்தத்தீவில் நடக்கும் அனைத்து கொடுக்கல் வாங்கல் விவகாரங்களுக்கு சுங்கம் வசூலிப்பதில்லை. பன்னாட்டு வணிகர்களின் வரவை ஊக்குவிக்கவே இந்த ஏற்பாடு. உள்ளூர் வணிகர்கள் சுங்கம் செலுத்தி நகருக்கு கொண்டு செல்வர்.
வெளி நாட்டு பயணிகள் முதலில் இறங்குவது இந்த தீவில் தான். மக்கள் போக்குவரத்து கண்காணிப்பாளர் மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் அனுமதி பெற்ற பின் தனி படகில் நகரத்திற்கு கொண்டு செல்லப் படுவர். நாம் கழிமுகத் தீவை நெருங்கி விட்டோம் என்று தெரிகிறது." "ஆம் ஏதோ ஒரு கரை தெரிகிறது". மிக அருகில் சற்றே ஆரவாரமிக்க கடற்கரை தென்பட்டது. சிறு வியாபாரிகள் படகை எதிர் நோக்கி காத்திருந்தார்கள். துடுப்புகள் அல்லாது அலைகளும் படகை கரையில் கொண்டு சேர்க்க துணை வந்தன. படகோட்டி படகில் இருந்து சிறு வடம் ஒன்றை கரையில் எறிந்தான். சூரியன் எழ இன்னும் நேரம் ஆகும் என்று தெரிந்தது. படகோட்டிகள் கடலில் இறங்கி படகை தள்ளினர். வியாபாரிகள் மற்றும் சுமை தூக்குவோர் படகை சூழ்ந்து கொண்டனர்.... (தொடரும்)...
Thursday, December 31, 2009
புத்தகம் புகுந்த கதை - 10
'வெளி'யிலிருந்து "விண்கலம் புகார் நகரத்துக்குள் நுழைந்து விட்டது. ஆனால் தரை இறங்குவதற்கு அனுமதி கிடைக்க இன்னும் சில நேரம் பிடிக்கும். அதுவரை புகார் நகரைச் சுற்றிப் பார்க்க விரும்பினால் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும். விருப்பமா?".. "நன்றி.. கண்டிப்பாக..யப்.. பூ..! "
ஒரு குதிரையின் மீது அமர்ந்து கொண்டு இருந்தேன். தீப்பந்தங்களால் ஒளியூட்டப்பட்ட சாலை அது. சாலைகளில் தென்னை மாவிலை தோரணங்கள் கட்டப் பட்டு இருந்தன. கமகமவென்று சந்தன வாசம் வீசிக் கொண்டு இருந்தது. ஊரின் ஒரு மூலையில் இருந்து மேல தாள வாத்தியங்கள் முழங்கிக் கொண்டு இருந்தன. மேலே என்ன? எதோ ஒரு பறக்கும் தட்டு? வளையல் ஓசையைத் தொடர்ந்து பெண்களின் சிரிப்பொலி கேட்டது. தூரத்தில் பெண்கள் சிலர் வந்து கொண்டு இருந்தனர். நடுவில் ஒரு இளம்பெண் மிகையான அலங்காரங்களுடன் வந்து கொண்டு இருந்தாள். ஆபரணங்கள் அதிகமாய் மறைத்த அங்கம், குழல் மறைத்த பாதிமுகம், கருப்பு என்று சொல்லிவிட முடியாத சற்றே வெளுத்த நிறம். தொலைவில் வருவதால் முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை. குதிரையை விரட்டி அவர்களை நெருங்கினேன். மங்களகரமான முகம், அழகானதா? சொல்ல முடியவில்லை.. ஆனால் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வதனம்.. ஆனால் யாரையும் கண்டு கொள்ளாத பாவம். திமிரா? இருக்காது..ஆனால் அந்த பாவம் அவளை அழகியாக்கியிருந்தது. "எக்ஸ்..சாரி.."
குதிரை பின்பக்கமாக நகர ஆரம்பித்தது. வேகமாக பின்புறம் ஓடியது. சாலை முன்புறம் நகர்ந்தது. குதிரை மறைந்தது. நின்று கொண்டு இருந்தேன். ஆனாலும் சாலை முன்புறம் அதிக வேகத்தில் நகர்ந்து கொண்டு தான் இருந்தது. நகரம் மறைய ஆரம்பித்தது. மறுபடியும் விண்கலத்தில்.. "ஸா..மன்னிக்கவும்.. தமிழில் பேச வேண்டும் என்பதை மறந்து விட்டேன்.." "பரவாயில்லை.. உங்களைத் திரும்ப அழைத்தது அதற்காக அல்ல.. தரை இறங்க அனுமதி கிடைத்து விட்டது." 'இயந்திரம் என்பது சரியாகத்தான் இருக்கிறது' நினைத்தேன். "மன்னிக்கவும். பல வாகனங்கள் வரிசையில் நிற்பதால் இப்பொழுது விட்டால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி வரும். உங்களுக்காக சிறப்பு அனுமதி பெற்று வாங்கிய கால இடைவெளிக்குள் சேர்ப்பிக்க வேண்டிய கடமை வாகனங்களுக்கு இருக்கிறது."
தரை இறங்கிய பின் வெளியே.. "பின்னால் திரும்பி இடக்கையை மேல்நோக்கி கீழேயும், வலக்கையை கீழ்நோக்கி மேலேயும் வைத்து.. இரு கைகளையும் அமுக்குவது போல் இணையுங்கள்." செய்தேன். விண்கலம் மறைந்தது. திரும்பினேன். "கதவைத் திறந்து வெளியே சென்று, காத்திருக்கவும்.." என்று மீண்டும் அதே அசரீரி.
காத்திருக்கும் அறையில்.. எக்கச் சக்கமான நபர்கள் காத்து இருந்தார்கள். "இந்திரவிழா அல்லவா? அதான் இத்தனை கூட்டம்" அருகில் இருந்தவர் தமிழில். "விழாக் காலங்களுக்கு இன்னும் சில படகுகளை சேர்த்திருக்கலாம். இந்த அரசாங்கம் என்று தான் ஒழுங்காக செயல்படுமோ. யாரோ முக்கிய நபர் வருகிறார் என்று பல வின்கலன்களைக் காக்க வைத்து விட்டார்கள்." "இந்திரசேனன் அழியாப்புலத்திலிருந்து".. அழைத்தார்கள். "எங்கிருந்து வருகிறீர்கள்" எனக் கேட்டார் அவர். 'உரோமாபுரி என்றா சொல்வது.. ' யோசித்துக் கொண்டு இருக்கும் போதே.. ஒரு பெண் வந்து "இந்திரசேனரே.. உங்களைத் தான் அழைக்கிறார்கள்".. "தலைநகரத்தில் இருந்து தான் வருகிறீர்களா?" என்றார் அவர். "ம்" தலையை எல்லா திசையிலும் அசைத்தேன்.
அந்த பெண் அழைத்து சென்று "இங்கே கை வையுங்கள்" என்றாள். ஒரு சிறிய ஒளியூட்டப்பட்ட பலகை அது. வைத்தேன். இந்திரசேனன் வெகு வேகமாக என்னில் இருந்து தூக்கி எறியப்பட்டான். நான் காணாமல் போய் இருந்தேன்.. இல்லை இருந்தது. ... (அடுத்த பாகத்தில் தொடரும்)...
ஒரு குதிரையின் மீது அமர்ந்து கொண்டு இருந்தேன். தீப்பந்தங்களால் ஒளியூட்டப்பட்ட சாலை அது. சாலைகளில் தென்னை மாவிலை தோரணங்கள் கட்டப் பட்டு இருந்தன. கமகமவென்று சந்தன வாசம் வீசிக் கொண்டு இருந்தது. ஊரின் ஒரு மூலையில் இருந்து மேல தாள வாத்தியங்கள் முழங்கிக் கொண்டு இருந்தன. மேலே என்ன? எதோ ஒரு பறக்கும் தட்டு? வளையல் ஓசையைத் தொடர்ந்து பெண்களின் சிரிப்பொலி கேட்டது. தூரத்தில் பெண்கள் சிலர் வந்து கொண்டு இருந்தனர். நடுவில் ஒரு இளம்பெண் மிகையான அலங்காரங்களுடன் வந்து கொண்டு இருந்தாள். ஆபரணங்கள் அதிகமாய் மறைத்த அங்கம், குழல் மறைத்த பாதிமுகம், கருப்பு என்று சொல்லிவிட முடியாத சற்றே வெளுத்த நிறம். தொலைவில் வருவதால் முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை. குதிரையை விரட்டி அவர்களை நெருங்கினேன். மங்களகரமான முகம், அழகானதா? சொல்ல முடியவில்லை.. ஆனால் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வதனம்.. ஆனால் யாரையும் கண்டு கொள்ளாத பாவம். திமிரா? இருக்காது..ஆனால் அந்த பாவம் அவளை அழகியாக்கியிருந்தது. "எக்ஸ்..சாரி.."
குதிரை பின்பக்கமாக நகர ஆரம்பித்தது. வேகமாக பின்புறம் ஓடியது. சாலை முன்புறம் நகர்ந்தது. குதிரை மறைந்தது. நின்று கொண்டு இருந்தேன். ஆனாலும் சாலை முன்புறம் அதிக வேகத்தில் நகர்ந்து கொண்டு தான் இருந்தது. நகரம் மறைய ஆரம்பித்தது. மறுபடியும் விண்கலத்தில்.. "ஸா..மன்னிக்கவும்.. தமிழில் பேச வேண்டும் என்பதை மறந்து விட்டேன்.." "பரவாயில்லை.. உங்களைத் திரும்ப அழைத்தது அதற்காக அல்ல.. தரை இறங்க அனுமதி கிடைத்து விட்டது." 'இயந்திரம் என்பது சரியாகத்தான் இருக்கிறது' நினைத்தேன். "மன்னிக்கவும். பல வாகனங்கள் வரிசையில் நிற்பதால் இப்பொழுது விட்டால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி வரும். உங்களுக்காக சிறப்பு அனுமதி பெற்று வாங்கிய கால இடைவெளிக்குள் சேர்ப்பிக்க வேண்டிய கடமை வாகனங்களுக்கு இருக்கிறது."
தரை இறங்கிய பின் வெளியே.. "பின்னால் திரும்பி இடக்கையை மேல்நோக்கி கீழேயும், வலக்கையை கீழ்நோக்கி மேலேயும் வைத்து.. இரு கைகளையும் அமுக்குவது போல் இணையுங்கள்." செய்தேன். விண்கலம் மறைந்தது. திரும்பினேன். "கதவைத் திறந்து வெளியே சென்று, காத்திருக்கவும்.." என்று மீண்டும் அதே அசரீரி.
காத்திருக்கும் அறையில்.. எக்கச் சக்கமான நபர்கள் காத்து இருந்தார்கள். "இந்திரவிழா அல்லவா? அதான் இத்தனை கூட்டம்" அருகில் இருந்தவர் தமிழில். "விழாக் காலங்களுக்கு இன்னும் சில படகுகளை சேர்த்திருக்கலாம். இந்த அரசாங்கம் என்று தான் ஒழுங்காக செயல்படுமோ. யாரோ முக்கிய நபர் வருகிறார் என்று பல வின்கலன்களைக் காக்க வைத்து விட்டார்கள்." "இந்திரசேனன் அழியாப்புலத்திலிருந்து".. அழைத்தார்கள். "எங்கிருந்து வருகிறீர்கள்" எனக் கேட்டார் அவர். 'உரோமாபுரி என்றா சொல்வது.. ' யோசித்துக் கொண்டு இருக்கும் போதே.. ஒரு பெண் வந்து "இந்திரசேனரே.. உங்களைத் தான் அழைக்கிறார்கள்".. "தலைநகரத்தில் இருந்து தான் வருகிறீர்களா?" என்றார் அவர். "ம்" தலையை எல்லா திசையிலும் அசைத்தேன்.
அந்த பெண் அழைத்து சென்று "இங்கே கை வையுங்கள்" என்றாள். ஒரு சிறிய ஒளியூட்டப்பட்ட பலகை அது. வைத்தேன். இந்திரசேனன் வெகு வேகமாக என்னில் இருந்து தூக்கி எறியப்பட்டான். நான் காணாமல் போய் இருந்தேன்.. இல்லை இருந்தது. ... (அடுத்த பாகத்தில் தொடரும்)...
Monday, December 28, 2009
புத்தகம் புகுந்த கதை - 9
மாயர்களின் சோதிடக் கணிப்புகள் உங்களை "மஹா" என்றே குறிப்பிடுகின்றன. அது ஏதோ ஒரு சங்கேதப் பெயர் அல்லது அடைமொழியாக இருக்கலாம். உங்களைப் பற்றிய ரகசியங்கள் எங்களுக்கு புரிந்து விடக் கூடாது என்பதர்க்கென்றே உருவாக்கப் பட்ட பெயர் என்று தெரிகின்றது. இந்தப் பெயர் நம்மவர்களில் அனைவருக்கும் பரிச்சியமான பெயர் என்பதாலும், நீங்கள் வரும் சமயம் இது என்று பலரும் எதிர்பார்ப்பதாலும் உங்களின் பாதுகாப்பு கருதி உங்களின் பெயர் "இந்திரசேனன்" என்று மாற்றப்பட்டது. புகாரின் பெருவாரியான மக்களுக்கு உங்களைப் பற்றிய தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆயினும் "நீங்கள் தான் மஹா" என்று அவர்களுக்கு தெரியப் படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறீர்கள். புகாரில் நீங்கள் பெருவணிகன் புரந்தரனின் தம்பி என்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் இது நாள் வரை உரோமாபுரியில் குருகுல வாசத்தில் இருந்ததாக சொல்லிக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் பூம்புகாரின் வரலாற்றை தெரிந்து கொள்வது மிக அவசியம்.
உசினரம் என்னும் நாட்டை செம்பியன் என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தான். வள்ளன்மையில் தன்னிகர் இல்லாதவன் என்னும் பெயர் கொண்டு வாழ்ந்து வந்தான். வேதங்களில் கூறப்பட்டுள்ள நூறு விதமான யாகங்களும் செய்து இந்திரனுக்கு நிகரானவனானான். ஒரு நாள் அவன் அரசவையில் இருக்கும் பொது ஒரு புறாவானது பருந்திடம் இருந்து அடைக்கலம் தேடி அவன் மடி புகுந்தது. அடைக்கலம் புகுந்த புறாவைக் காப்பாற்றி, பருந்தின் பசிக்கு தன் தொடைக்கறியை உணவாகக் கொடுத்தான். அவன் செயலைப் பார்த்த இந்திரன் அவன் நாடு மழை வளனுடன் செல்வச் செழிப்பும் பெற்று விளங்குமாறு வரமருளிச் சென்றான். இந்திரனின் வரத்தால் நாடு எல்லா வளங்களுடனும் செழிப்புற இருந்தது. எனவே இந்திரனுக்கு தன் நன்றியைத் தெரிவிக்கும் வண்ணம் இந்திரனுக்கு விழா எடுக்க விரும்பினான். மேலும் வளங்களின் அரசனான இந்திரன் தன் நாட்டிலேயே இருந்தால் தன் நாட்டுக்கு எவ்வித குறையும் வராது என்று நம்பிய செம்பியன் கடற்கரையோரம் இந்திரனின் இருப்பிடமான அமராவதிக்கு இணையான நகர் ஒன்றை நிர்மாணித்தான். அதை அமராவதி என்றே பெயரிட்டு அழைத்தான். மண்ணகத்து வான்பதி என்று பின்னாளில் அழைக்கப் பட்ட அந்த மூதூர் தான் பூம்புகார்.
அதன் பின் செம்பியன் வழி வந்த சோழ மன்னர்கள் அந்நகரைப் போற்றிப் பாதுகாத்து மேலும் எழிலுறும் வண்ணம் வானுயர் மாடங்கள் எழுப்பினர். கரிகால் சோழனின் காலத்தில் தலைநகர் ஆன பின்னும் கூட இந்திரா விழா தொடர்ந்து எடுப்பிக்கப் பட்டு வந்தது. பின்னர் "வாகைச்சென்னி" என்னும் மன்னன் காலத்தில் தொடர்ச்சியாக இருபது வருடங்கள் இந்திரா விழா எடுக்காத காரணத்தால் இந்திரனால் அழிக்கப்பட்டதாக கருதப்பட்டது. நாம் செல்ல விருக்கும் புகார் அழிக்கப்பட்ட பூம்புகார் நகரத்தைப் போன்றே வடிவமைக்கப் பட்டது. மேலும் நகரின் பழமையைக் காக்கும் பொருட்டு நவீனத்தின் அடிச் சுவடே தெரியாத வண்ணம் தலைநகரத்திற்கு வெகு தொலைவில் அமைக்கப் பட்டு உள்ளது. பழைய புகார் நகரத்தின் அனைத்து அம்சங்களுடனும் அமைக்கப் பட்டுள்ளது. இது குறித்தும் நீங்கள் அந்நகர மக்களிடம் எதுவும் கூற வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறீர்கள்.
உங்கள் உடை மற்றும் பேசும் மொழி ஆகியவை இந்த நகருக்கு ஏற்றார்போல் நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். அத்துடன் புகார் நகரத்தில் நுழையும் போது உங்களுள் ஒரு மாற்றம் ஏற்படும். வெளி ஆட்கள் நகரில் நுழையும் போது ஏற்படும் இயல்பானதொரு மாற்றம் எனவே பயம் கொள்ளத் தேவையில்லை. இது இந்த நகரத்தின் பாதுகாப்புக்காக "மாயன்" பிரகலாதனால் ஏற்படுத்தப் பட்டது. அப்பொழுது.. (தொடரும்)....
உசினரம் என்னும் நாட்டை செம்பியன் என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தான். வள்ளன்மையில் தன்னிகர் இல்லாதவன் என்னும் பெயர் கொண்டு வாழ்ந்து வந்தான். வேதங்களில் கூறப்பட்டுள்ள நூறு விதமான யாகங்களும் செய்து இந்திரனுக்கு நிகரானவனானான். ஒரு நாள் அவன் அரசவையில் இருக்கும் பொது ஒரு புறாவானது பருந்திடம் இருந்து அடைக்கலம் தேடி அவன் மடி புகுந்தது. அடைக்கலம் புகுந்த புறாவைக் காப்பாற்றி, பருந்தின் பசிக்கு தன் தொடைக்கறியை உணவாகக் கொடுத்தான். அவன் செயலைப் பார்த்த இந்திரன் அவன் நாடு மழை வளனுடன் செல்வச் செழிப்பும் பெற்று விளங்குமாறு வரமருளிச் சென்றான். இந்திரனின் வரத்தால் நாடு எல்லா வளங்களுடனும் செழிப்புற இருந்தது. எனவே இந்திரனுக்கு தன் நன்றியைத் தெரிவிக்கும் வண்ணம் இந்திரனுக்கு விழா எடுக்க விரும்பினான். மேலும் வளங்களின் அரசனான இந்திரன் தன் நாட்டிலேயே இருந்தால் தன் நாட்டுக்கு எவ்வித குறையும் வராது என்று நம்பிய செம்பியன் கடற்கரையோரம் இந்திரனின் இருப்பிடமான அமராவதிக்கு இணையான நகர் ஒன்றை நிர்மாணித்தான். அதை அமராவதி என்றே பெயரிட்டு அழைத்தான். மண்ணகத்து வான்பதி என்று பின்னாளில் அழைக்கப் பட்ட அந்த மூதூர் தான் பூம்புகார்.
அதன் பின் செம்பியன் வழி வந்த சோழ மன்னர்கள் அந்நகரைப் போற்றிப் பாதுகாத்து மேலும் எழிலுறும் வண்ணம் வானுயர் மாடங்கள் எழுப்பினர். கரிகால் சோழனின் காலத்தில் தலைநகர் ஆன பின்னும் கூட இந்திரா விழா தொடர்ந்து எடுப்பிக்கப் பட்டு வந்தது. பின்னர் "வாகைச்சென்னி" என்னும் மன்னன் காலத்தில் தொடர்ச்சியாக இருபது வருடங்கள் இந்திரா விழா எடுக்காத காரணத்தால் இந்திரனால் அழிக்கப்பட்டதாக கருதப்பட்டது. நாம் செல்ல விருக்கும் புகார் அழிக்கப்பட்ட பூம்புகார் நகரத்தைப் போன்றே வடிவமைக்கப் பட்டது. மேலும் நகரின் பழமையைக் காக்கும் பொருட்டு நவீனத்தின் அடிச் சுவடே தெரியாத வண்ணம் தலைநகரத்திற்கு வெகு தொலைவில் அமைக்கப் பட்டு உள்ளது. பழைய புகார் நகரத்தின் அனைத்து அம்சங்களுடனும் அமைக்கப் பட்டுள்ளது. இது குறித்தும் நீங்கள் அந்நகர மக்களிடம் எதுவும் கூற வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறீர்கள்.
உங்கள் உடை மற்றும் பேசும் மொழி ஆகியவை இந்த நகருக்கு ஏற்றார்போல் நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். அத்துடன் புகார் நகரத்தில் நுழையும் போது உங்களுள் ஒரு மாற்றம் ஏற்படும். வெளி ஆட்கள் நகரில் நுழையும் போது ஏற்படும் இயல்பானதொரு மாற்றம் எனவே பயம் கொள்ளத் தேவையில்லை. இது இந்த நகரத்தின் பாதுகாப்புக்காக "மாயன்" பிரகலாதனால் ஏற்படுத்தப் பட்டது. அப்பொழுது.. (தொடரும்)....
Subscribe to:
Posts (Atom)