Sunday, November 22, 2009

புத்தகம் புகுந்த கதை - 3

ஆராய்ச்சிக் கூடத்தின் மையப் பகுதி இருபத்து நான்கு மணி நேரமும் காமெராவினால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. காமெராவின் கேசட் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றப்படும். மே மாதம் 22 ஆம் தேதி காலை 4 மணிக்கு புதிய கேசட் மாற்றப்பட்டு ஓடிக் கொண்டு இருந்தது. 4:10 க்கு ஏதோ ஒரு மோட்டார் வாகனத்தின் சத்தத்தை தொடர்ந்து சித்ராங்கதா ஹரி என்னும் கால்கரி பல்கலைக்கழக மாணவி உள்ளே நுழைகிறார். அவரைத் தொடர்ந்து அதே பல்கலைக் கழக மாணவர் கண்ணன் வாசுதேவனும் உள்ளே நுழைகிறார். அந்தப் பெண் நேராக அந்தக் குரங்குகள் அடைக்கப் பட்டிருக்கும் கூண்டை நோக்கி செல்கிறாள். அதன்பின் கேசட்டில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக நடந்தவை எதுவும் பதிவாகவில்லை.

"ஒரே இருட்டு. மூன்றாக மடிக்கப்பட்டு இருந்த உடல் மெல்ல விரியத் தொடங்குகிறது. மூச்சு அடைக்கின்றது. என்னை மூழ்கடித்திருந்த நீரின் மட்டம் படிப் படியாக குறையத் தொடங்கியது. என் உடல் உந்தி வெளிய தள்ளப் பட்டது. எனக்கு அழ வேண்டும் என்று தோன்றியது. நான் அழத் தொடங்கினேன்."

சரியாக ஆறு மணிக்கு அடுத்த கேசட் பதிவு செய்யும் நேரத்தில் அந்தப் பெண் அங்கில்லை. கண்ணன் மட்டும் தன் கையில் ஒரு துணிப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு கூடத்தை விட்டு வெளியேறுகின்றான். ஆனால் ஆராய்ச்சிக் கூடத்தின் எந்தப் பொருட்களும் களவாடப் படவில்லை.

ஆராய்ச்சிக் கூடத்தை சோதனை செய்த போது அவர்களின் கை ரேகைகள் மட்டும் சிக்கின. கமெராவில் கண்ட அடையாள அட்டையை வைத்துக் கொண்டு விசாரித்ததில் கால்கரி பல்கலைக்கழகத்தில் அவர்கள் இருவரும் படிக்க வில்லை என்பதும் அவர்களின் அடையாள எண் உண்மையானது அல்ல என்றும் கண்டறியப் பட்டது. அவர்கள் யாரென்று தொடர்ந்து விசாரணை நடை பெற்று வருகின்றது

இந்த சம்பவத்திற்குப் பிறகு பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. அந்தக் குரங்குகளின் சிறப்பு அம்சங்கள் மறைந்திருந்தன. அவை ஒலி எழுப்பும் சக்தி இழந்திருந்தன. பார்ப்பதற்கும் சாதாரண சிம்பன்சி குரங்குகளை ஒத்திருந்தன. இரு குரங்குகளின் கண்களும் மஞ்சள் நிறம் படர்ந்து மங்கி இருந்தன. பின்னர் அவற்றின் ஜீன்களை ஆராய்ந்த போது சாதாரண சிம்பன்சியிடமிருந்து அவை எந்த அளவிலும் உயர்ந்தது என்று படவில்லை. துரதிர்ஷ்ட வசமாக அக்குரங்குகளிடம் இருந்து எடுத்து வைக்கப் பட்டு இருந்த உரோமங்களும், குருதி மாதிரியும் காணாமல் போய் இருந்தன.

இதை விடவும் திடுக்கிடும் மாற்றங்கள் அவற்றின் உடலில் நிகழ்ந்திருந்தன. அவை...

No comments: